search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முஸ்லிம் லீக்"

    • இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் இருந்த முஸ்லிம் லீக்கின் சிந்தனையுடன் ஒத்துடையதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உள்ளது - மோடி
    • முஸ்லீம் லீக் கட்சியை தங்களது தேர்தல் அறிக்கையுடன் ஒப்பிட்டு மோடி பரப்புரையில் ஈடுபடுகிறார் - காங்கிரஸ்

    பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில் "காங்கிரஸ் கட்சி நேற்று தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் இருந்த முஸ்லிம் லீக்கின் சிந்தனையுடன் ஒத்துடையதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உள்ளது. மேலும் கம்யூனிஸ்டு மற்றும் இடது சாரி சிந்தனைகள் மேலோங்கி உள்ளது" என்று தெரிவித்திருந்தார்.

    இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், காங்கிரஸின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் அறிக்கை போல் இருப்பதாக மோடி கூறிய விமர்சனத்திற்கு எதிராக இந்திய தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

    காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சல்மான் குர்ஷித், முகுல் வாஸ்னிக், பவன் கெரா உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.

    அந்த புகாரில், "பிரதமரின் பேச்சுகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானதாக உள்ளது. முஸ்லீம் லீக் கட்சியை தங்களது தேர்தல் அறிக்கையுடன் ஒப்பிட்டு மோடி பரப்புரையில் ஈடுபடுகிறார். மத அரசியலை முன்வைத்து நாட்டில் பிளவுவாதத்தை தூண்டும் வகையில் பிரதமர் மோடி பேசி வருகிறார். இவ்வாறு மோடி பிரச்சாரம் செய்வதை தடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நாளுக்கு நாள் பாஜனதாவின் வாய்ப்பு குறைந்து கொண்டே வருகிறது.
    • இதனால் பா.ஜனதா அவற்றின் நெருங்கிய நண்பரான முஸ்லிம் லீக்கை நினைவு கூறத் தொடங்கியுள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இந்திய சுதந்திர போராட்டத்திற்கு முந்தைய முஸ்லிம் லீக் சித்தாந்தத்தை ஒத்திருப்பதாக பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். பிரதமர் மோடியின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது-

    பிரதமர் மோடி- அமித் ஷா ஆகியோரின் அரசியல் மற்றும் சித்தாந்த முன்னோடிகள் சுதந்திர போராட்டத்தின் போது பிரட்டிஷ், முஸ்லிம் லீக்கை ஆதரித்தனர். இன்று கூட காங்கிரஸின் தேர்தல் அறிக்கைக்கு எதிராக முஸ்லிம் லீக்கை தூண்டி விடுகின்றனர். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை சாமானிய மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் உள்ளது

    1942-ல் இந்தியனே வெளியேறு என்ற மகாத்மா காந்தியின் அழைப்பை மோடி- அமித் ஷாவின் சித்தாந்த முன்னோடிகள் எதிர்த்தனர்

    வெள்ளையனே வெளியேறு போராட்டம் எப்படி நடத்தலாம்? காங்கிரஸ் கட்சியை எப்படி அடக்கலாம்? என சியாம பிரசாத் முகர்ஜி பிரிட்டிஷ் கவர்னருக்கு கடிதம் எழுதவில்லையா? மேலும் இந்தியர்கள் பிரிட்டிஷ் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என கூறவில்லையா?

    மோடி மற்றும் அமித் ஷா, அவர்கள் நியமித்த தலைவர்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து தவறான தகவலை பரப்பி வருகிறார்கள்.

    பிரதமர் மோடியின் பேச்சில் ஆர்.எஸ்.எஸ். வாடை வீசுகிறது. நாளுக்கு நாள் பா.ஜனதாவின் வாய்ப்பு இறங்கி கொண்டே வருகிறது. இதனால் பா.ஜனதா அவற்றின் நெருங்கிய நண்பர்களான முஸ்லிம் லீக்கை நினைவு கூறத் தொடங்கியுள்ளது.

    காங்கிரஸ் தேர்தலில் அறிக்கை 140 கோடி மக்களின் நம்பிக்கை மட்டும் அபிலாஷைகளை பிரதிபலிக்கிறது. அவர்களின் வலிமை மோடியின் 10 ஆண்டுகால அநீதியை முடிவுக்கு கொண்டு வரும்.

    இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

    • இஸ்லாமியத்தில் வெள்ளிக்கிழமை ஜும்மா நாளாக (சபை நாள்) அனுசரிக்கப்படுகிறது.
    • இதே நிலை தான் தமிழகத்திலும் உள்ளது. அங்கு வாக்குப்பதிவு நடைபெறும் 19-ந்தேதி, வெள்ளிக்கிழமை ஆகும்.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19-ந்தேதியும், 2-ம் கட்ட தேர்தல் கேரளாவில் 26-ந்தேதியும் நடக்கிறது. இந்த 2 நாட்களும் வெள்ளிக்கிழமை என்பதால், இஸ்லாமிய மக்கள் வாக்களிக்க சிரமத்தை ஏற்படுத்தும் என்ற கருத்து நிலவி வருகிறது.

    இது தொடர்பாக இந்திய முஸ்லிம் லீக் கேரள மாநில பொதுச்செயலாளர் பி.எம்.ஏ.சலாம் கூறியதாவது:-

    கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 26-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆகும். இஸ்லாமியத்தில் வெள்ளிக்கிழமை ஜும்மா நாளாக (சபை நாள்) அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் முஸ்லிம்கள், நமாஸ் (பிரார்த்தனை) செய்ய மசூதிகளுக்கு செல்வார்கள். அந்த நாளில் வாக்குப்பதிவு வைத்திருப்பது இஸ்லாமிய மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். இதே நிலை தான் தமிழகத்திலும் உள்ளது. அங்கு வாக்குப்பதிவு நடைபெறும் 19-ந்தேதி, வெள்ளிக்கிழமை ஆகும்.

    இந்த நாள் இஸ்லாமிய நம்பிக்கையை பின்பற்றும் வாக்காளர்கள், தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இடையூறாக இருக்கும். இதுகுறித்து உடனடியாக தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். இதனை மறுபரிசீலனை செய்ய அவர்கள் தயாராக வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
    • பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

    புதுடெல்லி:

    கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி குடியுரிமை திருத்த சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.

    இதன்படி, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமணர், பார்சிகள், பவுத்தர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது.

    குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனால் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படவில்லை.

    இதற்கிடையே குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகள் நேற்று வெளியிடப்பட்டது. இத்துடன் இந்த சட்டம் அமலுக்கு வந்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்தது.

    குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

    இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு தொடுத்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

    குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் விதிகள் மதிப்புமிக்க உரிமைகள் உருவாக்கப்பட்டு குறிப்பிட்ட சில மதங்களை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படுகிறது. அவசர கதியில் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தது. எனவே குடியுரிமை திருத்த சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பவள விழா நிறைவு மாநாடு டெல்லியில் நவம்பர் மாதம் 16-ந் தேதி நடைபெற உள்ளது.
    • பாராளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தையின் போது 2 தொகுதிகளை கேட்போம்.

    சென்னை:

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் அக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் தலைமையில் சென்னையில் நடந்தது.

    கட்சியின் மாநில தலை வராக கே.எம்.காதர் மொய்தீன் மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முகம்மது அபூ பக்கர், பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜகான் உள்பட அடுத்த 4 ஆண்டுகளுக்காக புதிதாக தேர்வான மாநில, சார்பு அணி நிர்வாகிகளின் பெயர்களும் அறிவிக்கப்பட்டன.

    பின்னர் செய்தியாளர்களிடம் காதர் மொய்தீன் கூறியதாவது:-

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பவள விழா நிறைவு மாநாடு டெல்லியில் நவம்பர் மாதம் 16-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை அழைக்க உள்ளோம். வேப்பூர் அருகே முஸ்லிம் லீக் சார்பில் நவம்பர் 4-ந் தேதி மருத்துவ கல்லூரி தொடங்கப்படுகிறது. தொடக்க விழாவில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

    இந்தியா கூட்டணி உருவான நாளில் இருந்து பிரதமர் பேச்சில் குழப்பம் அதிகமாக உள்ளது. 5 மாநில சட்டசபை தேர்தலில் தாங்கள் தோல்வியை தழுவப் போவதாக அவர்களே கூறுகிறார்கள். பாராளுமன்ற தேர்தலிலும் அதே நிலை தான் ஏற்படும். முஸ்லிம்களை இந்திய மக்களாக அங்கீகரிக்க மறுக்கிறார்கள். அதனாலேயே பா.ஜனதாவுக்கு முஸ்லிம் மக்களின் ஓட்டு செல்வதில்லை.

    அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி முறிவு ஒரு நாடகம். முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்வதில் தன்னால் இயன்றதை செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்து உள்ளார். விடுதலை செய்யப்பட வேண்டியவர்களின் பட்டியல் அவர்களுக்கு அனுப்பப் பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்து உள்ளது. இது தொடர்பாக கவர்னர், உள்துறை மந்திரியை சந்தித்து வலியுறுத்துவோம்.

    பாராளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தையின் போது 2 தொகுதிகளை கேட்போம். தற்போது ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெற்றிருப்பதால் அந்த தொகுதி வழங்கப்படும் என்று நம்புகிறோம். அடுத்து திருச்சியை கேட்டுப் பெறுவோம். வேலூர் தொகுதியை இது வரை நாங்கள் கேட்கவில்லை. நாங்கள் கேட்கும் தொகு தியை தி.மு.க. வழங்காமல் இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • இதில் பல்வேறு கட்சி நிர்வாகிகள் என 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஹைதர் அலி அம்பலம் தலைமை வகித்தார்.

    மாவட்ட நிர்வாகிகள் பிலால், அப்துல் கபூர், பகுசியா முன்னிலை வகித்தனர். காஜாமைதீன் ஆலிம் கிராத் ஓதி தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் இனாயத்துல்லா வரவேற்றார். திருப்பத்தூர் நகரில் தமிழர்களின் மொழி, பண்பாடு, மத நல்லிணக்கம் பாதுகாக்கும் வகையில் அண்ணா அறிவாலயம் ஏற்படுத்துதல், "உங்கள் தொகுதியில் மு.க.ஸ்டாலின்" என்ற பிரசாரத்தில் பெறப்பட்ட மனுக்களை பரிசீலித்து பாதிக்கப்பட்ட நபருக்கு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றி தர ஆர்ப்பாட்டத்தில் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.

    இதில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு, மனிதநேய மக்கள் கட்சி, போன்ற பல்வேறு கட்சி நிர்வாகிகள் என 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வழக்கறிஞர் முகமது மணிப்புறா நன்றி கூறினார்.

    • நகரில் குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளை அகற்றி, தரமான புதிய தார் சாலைகளை அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
    • பணிகளையும் அலட்சியத்துடன் மேற்கொண்டு வரும் அலுவலர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர்.

    ஆறுமுகநேரி:

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கிளையின் சார்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காயல்பட்டினம் நகராட்சி மன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.

    நகரில் குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளை அகற்றி, தரமான புதிய தார் சாலைகளை அமைத்தல், செயல்படாமல் இருக்கும் பயோகாஸ் திட்டத்தை விரைவில் இயக்கி, அதன் மூலம் மின் உற்பத்தி செய்தல், குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்களை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வருதல், வார்டு மறுவரையறையில் நிலவும் குளறுபடிகளைச் திருத்தி அமைத்தல், நகரின் மக்கள்தொகைக்கு ஏற்ப வார்டுகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், 2-வது குடிநீர் திட்டத்தின் மூலம் சீரான குடிநீர் விநியோகத்தை ஏற்படுத்துதல். தெருவிளக்குகள் பராமரிப்பு, நகர்மன்றக் கூட்டங்களில் நகர பொதுமக்களைப் பார்வையாளர்களாக அனுமதித்தல், கடற்கரையில் உள்ள குப்பைகளை அகற்றி சுகாதாரமாகவும் பராமரித்தல், பல்லாண்டு காலமாக வெறும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிக் கொண்டு அனைத்துப் பணிகளையும் அலட்சியத்துடன் மேற்கொண்டு வரும் அலுவலர்களை இடமாற்றம் செய்தல், எதிர்வரும் மழைக்காலத்தைக் கருத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கைப் பணிகளை மேற்கொள்ளுதல் ஆகிய கோரிக்கைகள் மனுவில் இடம்பெற்றிருந்தன. இந்த மனுவை முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் முகமது அபூபக்கர் தலைமையில் நகர் மன்ற ஆணையாளர் சுகந்தி, நகர் மன்ற தலைவர் முத்து முகமது ஆகியோரிடம் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநிலத் துணைச் செயலாளர் இப்ராஹீம் மக்கீ, மாவட்டச் செயலாளர் மஹ்மூதுல் ஹசன், நகர தலைவர் நூவு சாகிப், செயலாளர் அபூ சாலிஹ், பொருளாளர் சுலைமான், மாவட்ட நிர்வாகிகளான மன்னர் பாதுல் அஸ்ஹப், அம்பா ஜாபர், முகம்மத் இஸ்மாயில் புகாரீ, சித்தீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×